Just In
- 2 min ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 1 hr ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 1 hr ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- 2 hrs ago
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
Don't Miss!
- News
அதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்
- Automobiles
2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்!
- Finance
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி.. டி.ராஜேந்தர் ராஜினாமா.. விநியோகஸ்தர் சங்கத்தில் தொடர்கிறார்
சென்னை: புதிதாகத் தொடங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து டி.ராஜேந்தர் விலகி இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் வெற்றிபெற்றார்.
கன்னட ரீமேக்.. சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணையும் படம்.. 10 இயக்குனர்கள் வெளியிட்ட 'பத்து தல..'
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் தோல்வி அடைந்தனர்.

புதிய சங்கம்
பின்னர் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறிய டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கினார். இதன் முதற் செயற்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

வகிக்கக் கூடாது
அவர் ஏற்கனவே சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வருகிறார். அதன் பதவி இருக்கும்போது மற்ற சங்கத்தில் பொறுப்பு வகிக்கக் கூடாது என விதி இருப்பதால், அவர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நீடிக்க வேண்டும்
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி காலை நடைபெற இருக்கிறது. செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

ராஜினாமா செய்கிறேன்
அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய தலைவர்
இந்நிலையில் டி.ராஜேந்தர் விலகியுள்ளதை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளதாக, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியுள்ளார்.