Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்? டி.ராஜேந்தர் விளக்கம்!
சென்னை: டி.ராஜேந்தர் தலைமையில் புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பிலிம் சேம்பர், கில்டு போன்ற அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நிலையில், புதிய அமைப்பு ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
நடப்பு தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற சில தயாரிப்பாளர்கள், பாரதிராஜா தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.
தோல்வி அடைந்தனர்
அதில், மறைந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகனுமான முரளி ராம நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டைரக்டரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
பாதுகாப்பு சங்கம்
பின்னர் அவர் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறினார். இதற்கிடையே, டி.ராஜேந்தர் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் உருவாகிறது.
மற்ற விவரங்கள்
புதிய சங்கத்தில், தயாரிப்பாளர்கள் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், கே.ராஜன் பொருளாளராகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய சங்கம் பற்றிய மற்ற விவரங்கள் வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
முறைகேடு மட்டுமே
இதுபற்றி டி.ராஜேந்தர் கூறும்போது, சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடு மட்டுமே தேர்தலாக நடந்திருக்கக் கூடாது. எனவேதான் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்படுகிறது. நான் ஒரு ஜனநாயகவாதி. தயாரிப்பாளர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.