Don't Miss!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- News சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐஸ்வர்யாவுக்கு சரமாரி அடி!
நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், ஜூனியர் நடிகை ப்ரீத்தி உண்ணி என்பவருக்கும் ஹோட்டலில் டான்ஸ் ஆடும்போது மோதல் ஏற்பட்டது. இதில் ப்ரீத்தி உண்ணி, தனது அடியாட்களுடன் வந்து ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.
Click here for more images |
நடிகை ஐஸ்வர்யா தற்போது முன்பு போல நடிப்பதில்லை. முன்பு தனது தாயாருடன் கோபம் கொண்டு தனித்து வசித்து வந்த ஐஸ்வர்யா, லட்சுமியுடனேயே தற்போது சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவில் சென்றார் ஐஸ்வர்யா. அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். டான்ஸ் ஆடும்போது அங்கு ஆடிக் கொண்டிருந்த ப்ரீத்தி உண்ணி என்கிற ஜூனியர் நடிகையுடன் ஐஸ்வர்யாவுக்கு தகராறு ஏற்பட்டது.
இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். அபபோது ப்ரீத்தியை, ஐஸ்வர்யா கடுமையாகத் திட்டி கேவலப்படுத்தியதாக தெரிகிறது.
பின்னர் அங்கிருந்து கிளம்பினார் ஐஸ்வர்யா. அவர் திட்டியதால் கடுப்பான ப்ரீத்தி உண்ணி, அங்கு தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் சில அடியாட்களுடன் ஐஸ்வர்யாவின் காரைப் பின் தொடர்ந்தார்.
ஒரு இடத்தில் ஐஸ்வர்யாவின் காரை அவர்கள் மடக்கி நிறுத்தினர். பின்னர் ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர்.
அடிபட்ட ஐஸ்வர்யா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து ப்ரீத்தி உண்ணியையும், அவரது அடியாட்களையும் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் துணை நடிகை மற்றும் அவரது அடியாட்களிடம் ஐஸ்வர்யா அடி வாங்கிய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.