Don't Miss!
- News லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிலிம்சேம்பரில் மோதல்... தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு!
சென்னை: பிலிம் சேம்பர் தேர்தலில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிலிம்சேம்பர் நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன் கூறுகையில், "தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27-ந்தேதி) நடக்கிறது.
இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக நானும் செயலாளராக கமீலா நாசரும், பொருளாளராக உட்லண்ட்ஸ் வெங்கடேசும் மேலும் 16 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியிடுகிறோம்.
இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவரே 150 ஓட்டுகள் போடும் பிராக்சி முறை மூலம் கல்யாண் ஆதரிக்கும் அணியினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். 650 பிராக்சிகளை அவர்கள் வைத்துள்ளனர். கல்யாண் தொடர்ந்து இந்த பிராக்சி முறை மூலம்தான் தலைவராக இருக்கிறார்.
கல்யாண் சினிமா நூற்றாண்டு விழா நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. விழா நடந்த நேரு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ய ரூ.75 லட்சம் செலவிட்டதாகவும் பிஸ்கட் வாங்க ரூ.20 லட்சம் செலவிட்டதாகவும் கணக்கு எழுதியுள்ளனர்.
தெலுங்கு நடிகர்களை அழைத்து வரவும் பல கோடி செலவு செய்துள்ளனர். முதல்வர் ரூ.10 கோடி கொடுத்தார், விழாவுக்காக ரூ.12 கோடி வசூலானது. இவ்வளவுக்கு பிறகும் ரூ.2.5 கோடி நஷ்ட கணக்கு காட்டி உள்ளனர்.
எனவே பிலிம் சேம்பர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளோம்," என்றார்.