Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வெளிநாட்டு தமிழ்ப் படவிழாக்கள் ஊழல்மயமாகிவிட்டன!- குமுறும் லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: நான் இயக்கிய அம்மணி படத்தைப் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டனர் ஒரு சினிமா பட விழாவில் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே படங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக அம்மணி என்ற படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்தப் படத்தை துபாய் பட விழாவில் திரையிட முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியில் அவருக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், "அம்மணி திரைப்படத்தை துபாய் பட விழாவில் திரையிட வைக்க விண்ணப்பித்தேன். அவர்கள் படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்யச் சொன்னார்கள். படம் வெளிவரவில்லை என்பதால் அதன் பாஸ்வேர்ட் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். அவர்கள் கேட்கும்போது பாஸ்வேர்டை அளிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் பாஸ்வேர்டை கேட்கவும் இல்லை, படத்தைப் பார்க்கவும் இல்லை. ஆனால் படம் தேர்வாகவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இது போன்ற முயற்சிகளில், முன் அனுபவம், அந்த படக்குழுவினரில் நாம் எத்தனை பேரை தெரிந்து வைத்திருக்கிறோம் மற்றும் ரெகமண்டேஷன் போன்றவைதான் எடுபடும் என்பது இப்போதுதான் புரிகிறது. நாம் அனுப்பும் படங்களை பரிந்துரை இல்லாமல் பார்க்க அவர்கள் முயற்சிப்பது கூட இல்லை.
தமிழ் சினிமா படவிழாக்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் நடக்கும் இதுபோன்ற படவிழாக்கள் ஊழல்மயமானவை என்பது வருத்தத்துக்குரியது.
ஆனால் சராசரி ரசிகர்கள் என் படத்தை ரசிப்பார்கள். அதுதான் எனக்கான விருது," என்றார்.