Just In
- 11 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்... எதற்காக..?
சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் சினிமாவின் நலன் கருதியும், தமிழ்த் திரைப்பட முதலாளிகளின் நலன் கருதியும், தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கிற அதிரடியான முடிவுகள் அனைத்தும் முதலாளிகள் அறிந்ததே. அதன் அடிப்படையில், தற்போது தமிழ் திரைப்படத்துறையில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டியிருப்பதால் நமது சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேலைக்காரன்' விவகாரம்:
கடந்த 14-ம் தேதி நாளிதழ்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் விளம்பரம் முழுப் பக்கத்திற்கு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க விதிப்படி கால் பக்கத்துக்கு மேல் எந்தப் படத்துக்கும் விளம்பரம் கொடுக்கக் கூடாது. ஆனால், அதையும் மீறி முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சார்ப்பில் எதுவும் தெரிவிகப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மீறியதற்காக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணமே இந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.