Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்... எதற்காக..?
சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் சினிமாவின் நலன் கருதியும், தமிழ்த் திரைப்பட முதலாளிகளின் நலன் கருதியும், தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கிற அதிரடியான முடிவுகள் அனைத்தும் முதலாளிகள் அறிந்ததே. அதன் அடிப்படையில், தற்போது தமிழ் திரைப்படத்துறையில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டியிருப்பதால் நமது சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேலைக்காரன்' விவகாரம்:
கடந்த 14-ம் தேதி நாளிதழ்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் விளம்பரம் முழுப் பக்கத்திற்கு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க விதிப்படி கால் பக்கத்துக்கு மேல் எந்தப் படத்துக்கும் விளம்பரம் கொடுக்கக் கூடாது. ஆனால், அதையும் மீறி முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சார்ப்பில் எதுவும் தெரிவிகப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மீறியதற்காக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணமே இந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.