தயாரிப்பாளர் சங்க தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடக்கும் என அறிவித்தப்படி இன்று நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
இந்த தேர்தலில் தாணு அணி, எஸ்.ஏ. சந்திரசேகர் அணி மற்றும் விஷால் அணி என மூன்று அணிகள் களத்தில் உள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடந்தது.

மொத்தம் உள்ள 1,211 வாக்குகளில் 1,059 வாக்குகள் பதிவாகியுள்ளன. 1,059 பேரும் மாற்றத்தை விரும்பியே வாக்களித்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது விஷால் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications