Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனி ஒருவன் 2... கதை ரெடி... இதில் ஜெயம் ரவி ஹீரோ மட்டுமல்ல, உதவி இயக்குநரும் கூட!
சென்னை: தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கதைக்கருவை இயக்குநர் ராஜா தயார் செய்து விட்டதாகவும், அந்தப் படத்தில் தான் ஹீரோவோடு, உதவி இயக்குநராக பங்களிக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது தனி ஒருவன் படம். ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ராம் சரண் நடிக்க தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைக்களம் எப்படி இருக்கும் என ஜெயம் ரவி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கதைக்கரு தயார்...
தனிஒருவன் 2வது பாகத்துக்கான கதைக் கருவை அண்ணன் தயார் செய்து விட்டார். என்னிடம் கூறிய போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. நம்ம இந்தப் படத்தை பண்றோம் என்றார்.
உதவி இயக்குநர்...
எப்போது வேண்டுமோ என்னை கூப்பிடு நான் வந்துவிடுகிறேன். கதை விவாதத்தின் போது கூட கூப்பிட்டு என்று தெரிவித்திருக்கிறேன். ஏனென்றால் எங்க அண்ணன் படத்தில் ஓர் உதவி இயக்குநராகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
சொல்லப்படாத விஷயம்...
அந்தப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயம்.
நினைத்துப் பார்க்க முடியாதது...
நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு விஷயம். தேவைப்படுற ஒரு விஷயமா அது வரும்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.