Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
1500 பேருக்கு அன்னதானம்.. "தனி ஒருவன்" குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்
சென்னை: ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அதை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது படக் குழு.
இந்த வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியிருக்கின்றனர் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர். வெற்றியால் மகிழ்ந்து போன அந் நிறுவனம் படக்குழுவினருடன் இணைந்து சுமார் 1500 ஏழை மக்களுக்கு அன்னதானம் அளித்து படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கின்றனர்.
திருட்டுப் பயலே படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது.
அண்மைக்காலமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன, எனினும் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த நிலையை அண்மையில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் மாற்றியிருக்கிறது.
தனிஒருவன் படம் வரவேற்பில் மட்டுமின்றி வசூலிலும் பெரிதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, தனிஒருவன் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து 1500 பேருக்கு அன்னதானம் செய்து கொண்டாடியிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
நேற்று தியாகராய நகரில் இந்த அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது கல்பாத்தி சகோதரர்கள், இயக்குநர் மோகன்ராஜா, எடிட்டர் மோகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீசரண் மற்றும் ஒளிபதிவாளர் ராம்ஜி ஆகியோர் இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் தாங்களே மக்களுக்கு உணவு பரிமாறி அன்னதான விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.