நாசர் மற்றும் விஷாலுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தங்கையா என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தங்கையா. இவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கையாவின் புகாருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











