துவார் சந்திரசேகரின் இரு புதிய படங்கள்... புதுமுக இயக்குநர்கள் இயக்குகிறார்கள்!
எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்' படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.
வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தந்த எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தொட்டால் தொடரும்.

தனது தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன். திறமையானவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அப்படி அறிவிப்பு வெளியிட்ட முதல் படம் சறுக்கினாலும், தன் வாக்குறுதியை மறக்காமல் இப்போது இரண்டு புதியவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
எட்டுத்திக்கும் மதயானை, வம்சம் ஆகிய படங்களில் நடித்தவரும், அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குனருமான டி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம் செப்டெம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஊட்டி மற்றும் கோவையில் தொடங்குகிறது. யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல் வி கணேஷ் இசையமைக்கிறார். அதோடு மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.
அடுத்து துவார் சந்திர சேகர் தனது மகன் கோவின் (Govin) நடிக்க, பசங்க மாதிரியான குழந்தைகள் படம் ஒன்றையும் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் தனது மகனையும் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்ட தயாரிப்பாளர் சந்திர சேகர் இப்படமும் என் வாழ்வில் பெருமை கொள்ளக்கூடிய படமாக அமையும். ஏனெனில் இது குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளை பேசக்கூடிய கதை எனக் குறிப்பிட்டார். மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











