Don't Miss!
- Lifestyle
இந்திய ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைய இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- News
ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக முடித்து கொண்ட நிர்மலா சீதாராமன்! கடந்த ஆண்டுகளை போல இல்லை.. எவ்வளவு நேரம்
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்!
ஆந்திரா : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்.
மகேஷ் பாபுவின் தாயார் உயிரிழந்தது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
இந்திரா தேவி உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐபோன் கொடுத்த தயாரிப்பாளருக்கு..கூல் சுரேஷ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

மகேஷ் பாபுவின் தாயார்
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான கட்டமனேனி இந்திரா தேவி சற்று முன் காலமானார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு தொடர்பான உடல்நிலை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களான மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதிகாலை காலமானார்
நேற்றிரவு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததை அடுத்து சிறிது நேரம் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். வென்டிலேட்டருக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை, இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த ஒரு வாரமாக ஏஐஜி மருத்துவமனையில் இருந்த அம்மாவை மகேஷ் பாபு பல முறை நேரில் சென்று பார்த்துள்ளார்.

பல ஆண்டுகள் தனிமையில்
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, இந்திராதேவி பிரிந்து விஜயநிர்மலாவை மணந்த பிறகு, இந்திராதேவி தனிமையில் பல ஆண்டுகளாக இருந்துள்ளார். அவரின் மகன் மகேஷ் பாபு மட்டும் அம்மாவை அடிக்கடி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபு மறைந்த காயமே இன்னும் ஆறாத நிலையில், மகேஷ் பாபு தற்போது தனது அன்புக்குரிய தாயாரை இழந்து சோகத்தில் மூழ்கி உள்ளார்.

நாளை மறுதினம் இறுதி சடங்கு
இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதி சடங்கு மறுதினம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திராதேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்கள் இரங்கல்
மகேஷ் பாபுவின் தாயாரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு இணையவாசி இந்திரம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அண்ணாயா urstrulyMahesh எப்போதும் உங்களுடன் இருப்பார். மகேஷ்பாபு அம்மாவின் மறைவு வருத்தமளிக்கிறது கட்டமனேனி குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.