Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காருக்குள்ளே போட்டி...சண்டைப்போடும் போட்டியாளர்கள்...டஃப் ஃபைட்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு கொளுத்தி போடும் விதமான டாஸ்க்குகளை பிக்பாஸும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். டாஸ்க் பழையதாக இருந்தாலும் போட்டியாளர்கள் இடையே நடக்கும் சண்டை சுவாரஸ்யமாகவே உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகி பிறகு, சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களில் மட்டும் வந்து போட்டியாளர்களுக்குள் அந்த வாரத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி பேசி, ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுபவர் பற்றி அறிவிக்கிறார்.
பீஸ்ட் பட கிளைமேக்ஸ் பற்றி பதிவு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. ஏன் இப்படி?
வெளியேறி போட்டியாளர்கள்
மொத்தம் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட்டில் இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அனிதா, அபினய், தாடி பாலாஜி, சினேகன், வனிதா விஜயக்குமார் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி, வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ளார். கலக்க போவது யாரு சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோரும் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர்.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா
51 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது நடைபெறும் எட்டாவது வாரத்தில் அபிராமி, பாலா, ஜுலி, ரம்யா பாண்டியன், சதீஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, சுருதி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார கேப்டனாக தாமரை இருந்து வருவதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் கார் டாஸ்க் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
சடுகுடு வண்டிக்குள் சண்டை
சடுகுடு வண்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் வண்டிக்குள் ஏற வேண்டும். அவர்களை வெளியேற்ற பல தடை செய்யப்படும். அந்த தடைகளை தாண்டி, போட்டியாளர்களையும் சமாளித்து கடைசி வரை வண்டியில் இருப்பவர் தான் வெற்றியாளர் என சொல்லப்பட்டுள்ளது. இதில் போட்டியில் தொடர உனக்கு தகுதியில்லை என ஒவ்வொருவரும் மாறி மாறி சொல்லிக் கொள்ள அது பெரிய வாக்குவாதமாக மாறி உள்ளது.
யாருக்கு தகுதி இருக்கு
இந்த டாஸ்கில் இருந்து இதுவரை சதீஷ், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப் போன்றோர் வெளியேறி உள்ளனர். தற்போது பாலா, சுருதி, அபிராமி, தாமரை, ஜுலி ஆகியோர் போட்டி போட்டு வருகிறார்கள். இதில் ஏன் தனக்காக ஓட்டுப் போடவில்லை என பாலா, சுருதியிடம் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் சுருதியோ, ஏன் ஜுலியை கேட்காமல் என்னை மட்டும் கேட்கிறாய் என சண்டை போடுகிறார். இதுவரை பாசம், நட்பு என பேசி வந்த போட்டியாளர்கள் இப்போது அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டு வருகிறார்கள். இதனால் கடைசி வரை தாக்குபிடித்து யார் வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.