For Daily Alerts
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'டிராபிக்' மலையாளப் பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மரணம்
News
oi-Shankar
By Shankar
|
டிராபிக் என்ற புகழ்பெற்ற மலையாளப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 42.
இவர் இயக்கிய வேட்ட (Vettah) என்கிற மலையாளப் படம் சமீபத்தில்தான் வெளியாகியது. வேட்ட படப்பிடிப்பின்போதே அவருக்குப் பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
2011-ல் வெளிவந்த டிராபிக் படம் மூலம் புகழ்பெற்றவர் ராஜேஷ் பிள்ளை. இந்தப் படம் தமிழில், சென்னையில் ஒருநாள் என்று ரீமேக் ஆனது. மலையாளத் திரையுலகின் ஒரு பெரிய திருப்புமுனையாக டிராபிக் படம் மதிப்பிடப்படுகிறது. இதனால் ராஜேஷின் மரணம், மலையாளத் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
ராஜேஷ், 5 படங்களை இயக்கியுள்ளார். ராஜேஷ் பிள்ளையின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Traffic Malayalam filmmaker Rajesh Pillai was passed away due to poor health.
Story first published: Saturday, February 27, 2016, 12:56 [IST]
Other articles published on Feb 27, 2016