Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திமுகவில் சீட் கேட்டு திருநங்கை கல்கி மனு!
சகோதரி என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் கல்கி. நர்த்தகி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தேர்தலில் சீட் கேட்டு திருநங்கையொருவர் விண்ணப்பிப்பது இதுவே முதல் முறை.
தி.மு.க. சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ள கல்கி, இதுகுறித்துக் கூறுகையில், "அரவாணி என்பதை திருநங்கை என மாற்றியவர் கலைஞர்தான். எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் கட்சி தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன. எனவே தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பி மனு கொடுத்துள்ளேன்.
நான் தேர்தலில் போட்டி யிட தி.மு.க. தலைவர் சீட் தருவாரா என்று தெரியாது. என்றாலும் என் விருப்பத்தை தலைவருக்கு தெரிவித்துவிட்டேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த எல்லாருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும். எனக்கு சீட் கேட்டு இதுவரை எந்த தலைவரையும் நான் சந்தித்து பேசவில்லை...", என்றார் அவர்.