Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க பாராளுமன்றத்தில் பேசுவேன் - திருச்சி சிவா
மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் 'பராசக்தி' திரைப்படத்தின் வைரவிழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், "வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதல் அனைத்து தேசபக்தர்களையும் நடிப்பாற்றலால் மக்கள் மன்றத்தில் நடமாட விட்டவர் சிவாஜி. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பெரிய தலைவர்கள் எல்லாம் ஜாதிய வளையத்துக்குள் தள்ளப்பட்டு முடக்கப்பட்டு விடுவர்.
ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஆண், பெண் மனதிலும் குடியேறியவர் சிவாஜி. அவரது நடிப்பாற்றல் பற்றி பேசிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாக மாறிக் காண்பித்தவர் சிவாஜி. அவரைப்போன்று இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது.
எத்தனை சாதனை நடிகர்கள் வந்தாலும், அவரது நடிப்பை பின்பற்றித்தான் வரமுடியும்.
கலையுலகின் மாமேதையான அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் நான் பேசுவதற்கு ஆதரவு கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பல எம்பிக்களை சந்தித்தேன். டெல்லியில் முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும், 'இந்த வேலை உனக்கு எதற்கு' என ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.
உயர்ந்த மாமனிதன் உயிரோடு இல்லாவிட்டால், அவரது புகழை மறைத்து விடமுடியுமா? அந்த மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் இந்தியாவுக்கும் பெருமை, மத்திய அரசுக்கும் பெருமை. அந்த விருதை அவருக்கு வழங்கும்வரை மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்," என்றார்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!