Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சென்னைப் புத்தகக் காட்சி... கவிஞர் வைரமுத்துவுக்காக இரு அரங்குகள்!
சென்னை: இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது.
கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன.
கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மட்டும் அந்த அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. "வைரமுத்து நூலரங்கம்" என்ற பெயரில் இயங்கும் அந்த அரங்குகளின் எண்கள்: 614 மற்றும் 615.
இந்த அரங்கில் வைரமுத்துவின் மொத்த நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும்.
புத்தகக் காட்சியில் தன் அரங்குக்கு ஜூன் 4 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாசகர்களைச் சந்திக்கக் கவிஞர் வைரமுத்து வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் நூல்களில் கையொப்பமிடுகிறார். வாசகர்கள் அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்கிறது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், பொதுச்செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்துவை வரவேற்கிறார்கள்.