Just In
- 24 min ago
சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
- 55 min ago
ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!
- 1 hr ago
கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
Don't Miss!
- News
3வது நாளாக ஐடி ரெய்டு.. கனடாவில் உள்ள பால் தினகரன், குடும்பத்தினரை அழைத்து விசாரிக்க திட்டம்?
- Automobiles
2 விதமாக பயன்படுத்திக்கலாம்! இந்தியாவில் அறிமுகமானது வாகன பதிவு தேவைப்படாத ஒகினவா மின்சார ஸ்கூட்டர்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
30 ஆண்டுகளுக்குப்பிறகு இணையும் இளையராஜா வசந்த் கூட்டணி!
சென்னை : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக இருக்கும் இயக்குனர் வசந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கி பல விருதுகளையும் வென்று வரும் நிலையில் விரைவில் திரையில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
மென்மையான காதல் கதைகளை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் வசந்த்தின் கேளடி கண்மணி, ஆசை,நேருக்கு நேர், ரிதம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரியை கெட்டவரா புரிய வைக்க புதுசா எப்போர்ட் போடுறாராம்.. ரியோவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
இந்த நிலையில் கேளடி கண்மணி திரைப்படத்திற்குப் பிறகு 30ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இளையராஜாவுடன் வசந்த் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேளடி கண்மணி
மென்மையான காதல் கதைகளை வித்தியாசமான கோணங்களில் ரசிகர்களுக்கு தொடர்ந்து அளித்து வரும் இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலச்சந்தர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.

மிகப் பெரிய பலமாக
1990ல் வெளியான கேளடி கண்மணி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விருதுகளையும் வென்று இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வர இளையராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது குறிப்பாக மண்ணில் இந்த காதல் இன்றி பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து அஜித், விஜய், சூர்யா என பிரபலமான நடிகர்களை இயக்கி சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்தார்.

மீண்டும் இணைய உள்ளார்
நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் என இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு விதமாக அனைவரையும் கொண்டாட வைத்து வந்தது. முதல்படமான கேளடி கண்மணி திரைப்படத்திற்கு பிறகு மற்ற திரைப்படங்களில் வேறு வேறு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த நிலையில் இப்பொழுது மீண்டும் இளையராஜாவுடன் இணைய உள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் இயக்குனர் வசந்த் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்குப் பிறகு தான் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தை தானே சொந்த தயாரிப்பில் தயாரிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த் மற்றும் இளையராஜா ஒன்றாக இணைந்து பணியாற்ற உள்ள செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.