Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீரையன்... 90 களின் பின்னணி, தஞ்சை மண்வாசனையுடன் வரும் படம்!
சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது.
வீரையன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கதை தந்தை - மகன் பாசத்தை மைய இழையாக வைத்து தயாராகி வருகிறது.
தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் இந்தக் கதையில், தனது மகன் மேல் தகப்பன் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையினை மகன் போராடி ஜெயிக்கிறானா என்பதே திரைக்கதையாகும்.
மேலும் தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதை மிக்க வாழ்க்கை முறையை பறைசாற்றும் படமாகவும் இது இருக்கும்.
இப்படத்தில் கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர் மற்றும் நாயகியாக ஷைனி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கயல் வின்செண்ட், தென்னவன், எழுத்தாளர் வேலராமமூர்த்தி, ஆரண்ய காண்டம் வசந்த், விஜய் டிவி ஹேமா மற்றும் புதுமுகமாக திருநங்கை பிரீத்திஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் பரித் எழுத்தாளர் கலைமாமணி கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும் களவாணி படத்தின் நிர்வாக தயாரிப்பளாரகவும் பணிபுரிந்துள்ளார்.
இசை : சண்டி வீரன் எஸ் என் அருணகிரி.
வீரையன் என்பது 1992-ல் ரஜினியை வைத்து எடுக்கவிருந்த ஒரு படத்துக்கு சூட்டப்பட்ட தலைப்பு. ரஜினி ரசிகன் இதழில் தொடராக இதன் திரைக்கதை வெளியானது. ஆனால் ஏதோ காரணத்தால் படம் கைவிடப்பட்டது.