Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் 'கத்தி'
ஹைதராபாத்: விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய கத்தி படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர் சமரச முயற்சிகளுக்குப் பின் கோபி தனது வழக்கை வாபஸ் பெற்றார்.இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கும் இதுபோன்ற ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
இந்தக் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் என்.நரசிம்ம ராவ் என்பவர் புகார் ஒன்றை தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில் இதன் உண்மையான கதை என்னுடையது தான். இதன் உண்மையான விவரங்கள் தெரியும் வரை இப்படத்தை எடுக்க நான் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தப் புகார் காரணமாக தற்போது கத்தி படத்தின் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிரஞ்சீவி தனது 150 படமாக கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.