Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு விஜயகாந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல சரத்குமாரும் பொதுச் செயலாளர் பதவிக்குபோட்டியிடுகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தலைவர் பதவிக்கு விஜயகாந்த்தையும், பொதுச் செயலாளர் பதவிக்கு சரத்குமாரையும், துணைத் தலைவர்கள் பதவிக்கு நெப்போலியன்மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரையும் மீண்டும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்க ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து தலைவர் பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய்காந்த். அதேபோல, பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் துணைத் தலைவர்கள் பதவிக்கும்,பொருளாளர் பதவிக்கு கே.என்.காளையும்மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய 10ம் தேதி கடைசி நாளாகும்.