Don't Miss!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
சென்னை:
நடிகர் விஜயகாந்த் தலைமையிலான படக் குழுவினர் தங்களது பண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துபடப்பிடிப்பு நடத்தியதோடு, பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்று விட்டதாக பரணீதரன்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கோவை மாவட்டம் சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணீதரன். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில்,
எனது தந்தைக்குச் சொந்தமான தென்னை மரங்கள் அடங்கிய தோப்பு மற்றும் பண்ணை வீடு சடையபாளையத்தில்உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, நாங்கள் ஊரில் இல்லாத போது, விஜயகாந்த், நடிகை சூசன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர் எங்களது பண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் அங்கு நெறஞ்ச மனசுக்காரன் படப்பிடிப்பைநடத்தியுள்ளனர். பின்னர் விஜயகாந்த்தும், சூசனும் எங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை பண்ணைக்குள் கொண்டு சென்று பயன்படுத்தி அங்குள்ள செடிகளையும்,மரங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது, ரூ. 60,000 மதிப்புள்ளமோட்டார் பம்புசெட் உள்ளிட்டவற்றை திருடிச் சென்று விட்டனர்.
ஊர் திரும்பிய நாங்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக, கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலையத்தில்புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால் புகாரை வாங்க மறுத்த சப் இன்ஸ்பெக்டர் சிவராமன், விஜயகாந்த் பெரியநடிகர், அவர் மீதா பொய் புகார் சொல்கிறீர்கள் என்று கூறி புகாரை வாங்க மறுத்து விட்டார்.
இதையடுத்து நெறஞ்ச மனசுக்காரன் படத் தயாரிப்பு நிர்வாகியிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. இந் நிலையில்கோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜன் என்னைக் கூப்பிட்டு மிரட்டி, அடித்தார்.
மேலும் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டதாக எழுதப்பட்ட ஒருதாளில் என்னை மிரட்டி கையெழுத்தையும் வாங்கினார்.
இதில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும். நான் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பரணீதரன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், கோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்ஆகியோர் வரும் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.