Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிம்புவை ஏமாற்றி கெட்டபேரை உருவாக்கிய 2 நண்பர்கள்.. காலம் கடந்து சுதாரித்த டி.ஆர். அதிரடி முடிவு!
சிம்புவின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இரண்டு பேரை, அவரது தந்தை டி.ராஜேந்தர் துரத்திவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவின் பெயரை கெடுப்பவர்கள் யார் என்பது குறித்து ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா நடிகர்களில் நடிப்பு மட்டுமல்லாமல் அனைத்து துறைகளில் வல்லவர் சிம்பு. கிட்டத்தட்ட கமல்ஹாசனை போல தான் சிம்புவும். அதுபோல் ஒரு நாள் முழுவதும் நடிக்க வேண்டிய காட்சிகளை, அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக, அழகாக நடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.
இத்தனை திறமைகள் இருந்தாலும், சிம்புவை பற்றி நல்லதாக வரும் செய்திகளைவிட கெட்ட செய்திகள் தான் அதிகம். ஆனால் இப்போது புதிதாக ஒரு செய்தி சிம்புவை பற்றி வந்துள்ளது.
மாநாடு:
அதாவது சிம்புவின் பெயரை கெடுப்பவர்கள் யார் என்பது தான் அது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். நம்முடன் அவர்கள் பகிர்ந்துகொண்டவை இது தான். "சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சிம்பு கட்டுப்பாடு விதித்துள்ளார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அதனால், தற்போது சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘மாநாடு' எனும் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளிவராது என்பதும் அந்தச் செய்தியில் இருந்த தகவல்.
இரண்டு நண்பர்கள்:
ஆனால், உண்மை என்னவென்றால், சிம்பு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படி ஒரு கட்டுப்பாட்டை எந்தத் தயாரிப்பாளரிடமும், எந்த இயக்குனரிடமும் விதித்ததில்லை. பிறகு எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகின்றன? அதற்குக் காரணம், சிம்புவோடு 24 மணி நேரமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிம்புவின் இரண்டு நண்பர்கள் தான். இவர்கள்தான் சிம்புவின் உதவியாளர்களைப் போல் எப்போதும் அவர் உடனிருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் தீபன் பூபதி, மற்றொருவர் பெயர் தேவராஜ்.
கெட்ட பேர்:
இந்த இரண்டு பேர் தான், "சிம்பு அப்படிச் சொன்னார். இப்படிச் சொன்னார் " என்று தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் தவறான தகவல்களைக் கொடுக்கின்றனர். அதை சிம்பு சொன்னதாக தயாரிப்பாளர்களும் நம்பி விடுகின்றனர். காரணம், இந்த இரண்டு பேரை நம்பித்தான் சிம்பு கால்ஷிட் உள்ளிட்ட தனது அனைத்து விஷயங்களையும் ஒப்படைத்துள்ளார். அதைச் சரியாக செய்து, சிம்புவின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்க வேண்டிய இந்த இரண்டு பேரும், அதனை தங்களுக்கு சாதகமாக தப்பும் தவறுமாகச் செய்து, சிம்புவுக்கு இண்டஸ்ட்ரியில் கெட்டபெயரை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
துரத்தி விடப்பட்டனர்:
இதையெல்லாம் சிம்புவின் நலம் விரும்பிகள் சிம்புவிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார்கள். அதேநேரத்தில், சிம்புவுக்கும் மெல்ல மெல்ல உண்மை தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் பற்றி தன் தந்தை டி.ராஜேந்தரிடம் மனம்விட்டுப் பேசிய சிம்பு, அவரின் துணையோடு தன் வளர்ச்சிக்கு தடையாக இருந்த, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்த, தன் சம்பாத்யத்தை ஆட்டயப்போட்டுக்கொண்டிருந்த தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார்.
வெற்றி முகம்:
இதையடுத்து இப்போது சிம்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் அவரது தந்தை டி.ராஜேந்தர் தான் பார்த்து வருகிறார். அவருடன் சிம்புவின் தாயார் உஷாவும், தங்கையும் சேர்ந்து சிம்புவின் கால்ஷீட் உள்ளிட்டவைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர். எனவே இனி சிம்புவுக்கு என்றுமே வெற்றி முகம்தான்" என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எப்படியோ நல்லது நடந்தால் மகிழ்ச்சி.