Just In
- 1 hr ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 2 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 2 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 2 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?'
தன் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்பதாக எழந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார் நடிகர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா முதல் முறையாக நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, நாயகிகள் ரேஷ்மி மேனன், சான்ட்ரா, கலையரசன், அப்புக்குட்டி, காளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, இசையமைப்பாளர் அச்சு ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹா, "இந்தப் படம் நிறைய தடைகளைத் தாண்டி வருகிறது. சக்திவேல் இந்தக் கதையை ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அனைத்தும் நல்லபடியாக நடக்க எங்கள் தயாரிப்பாளர் டில்லி பாபுதான் காரணம். நாங்கள் கேட்ட எதையும் அவர் மறுக்காமல் செய்து கொடுத்தார்," என்றார்.
அவரிடம், "நீங்கள் முதலில் அறிமுகமான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தில் டப்பிங் பேசி முடிக்க, லாபத்தில் பாதியைக் கேட்கிறீர்கள் என்று புகார் எழுந்துள்ளதே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, "முதலில் ஒரு குறும்படம் என்று சொல்லித்தான் அதில் என்னை நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது பெரிய படமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதற்குரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். இதை யாராவது கேட்டீர்களா?" என்றார்.
நியாயமான கேள்வி.. அதான் இப்ப நீங்க கேட்டதையே போட்டாச்சே பாபி!