புலி படத்தில் நடிக்க விஜய்யை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா?
சிம்பு இயக்கும் புலி படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலி கதையை நடிகர் விஜய் ஒப்புக்கொண்டது குறித்து சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது அது விஜய்க்கு சரியாகப் படவில்லை. வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்ததால் உடனே ஓகே சொல்லவில்லை. இன்னொரு அவர் தனது முகத் தோற்றத்தையோ கெட்டப்பையோ இதுவரை மாற்றியதுமில்லை.
ஆனால் விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப்போனது. 'அப்பா இது நீங்கள் பண்ணவேண்டிய படம். கண்டிப்பாக ஹிட் ஆகும்.. உங்களுக்கு பெருமை தரும்,' என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.
மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொன்னது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாற வைத்து சிம்புதேவனுக்கு சம்மதம் சொல்ல வைத்ததாம்.
வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் இணைந்து ஆடியுள்ளான் சிறுவன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











