Just In
- just now
பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ!
- 13 min ago
சினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி!
- 57 min ago
பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
Don't Miss!
- Automobiles
அறிமுகமாகி 15ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி கார்... இதுவே 2020ல் சிறந்த விற்பனையான கார்!!
- News
மறக்காம ஓட்டுப்போடுங்க மக்களே... சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த 48 வருட பழக்கம்.. கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளி வைத்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்!
சென்னை: தனது 48 வருட வழக்கத்தை பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கொரோனாவால் தள்ளி வைத்திருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். பல்வேறு மொழிகளில் ஏராளமானப் பாடல்களை பாடியிருக்கிறார்.
சிறந்த பாடலுக்காக, எட்டு முறை தேசிய விருது பெற்றவர், இசை ஜாம்பவான் கே.ஜே. யேசுதாஸ்.

ஹரிவராசனம்
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனைப் படைத்தவர். திரையுலகில், 1960-ஆம் வருடம் தனது இசைப் பயணத்தை தொடங்கிய யேசுதாஸ், பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான்.

குவிந்து வருகிறது
பிரபல பாடகரான அவருக்கு இன்று 81 வது பிறந்த நாள். இதையடுத்து பின்னணி பாடகர்களும் இசை ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மூகாம்பிகை கோயில்
கே.ஜே.யேசுதாஸ், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்கு அம்மன் பாடலைப் பாடி இசைக் கச்சேரியும்
நடத்துவார். கடந்த 48 வருடமாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் அவர் அங்கு செல்ல வில்லை.

டல்லாஸில் பூஜை
கொரோனா பரவல் அதிகரிப்பாலும் கொரோனா கட்டுப்பாடுகளாலும், அவர் மூகாம்பிகை கோயிலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு டல்லாஸ் பகுதியில் இருக்கும் ஜேசுதாஸ், தனது வீட்டில் இருந்தபடியே பூஜை செய்கிறார்.

பிரம்மாண்ட ஸ்கிரீன்
பிறகு வீடியோ மூலம் அவர், அம்மன் பாடல் பாடுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக மூகாம்பிகை கோயிலின், சரஸ்வதி மண்டபத்தில் பிரம்மாண்ட டிவி ஸ்கிரீன் அமைக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் தனது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு கே.ஜே.யேசுதாஸ் குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு வந்திருந்தார்.