Don't Miss!
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காளி - எப்படி இருக்கு படம்?
பெற்றோரைத் தேடிப் பயணிக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பயணமே காளி
Recommended Video
சென்னை: தன்னை பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கரு.
நடிகர்கள் - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ், இயக்கம் - கிருத்திகா உதயநிதி. தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி,
அமெரிக்காவில் வசதியாக வாழும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). அவருக்கு தினமும் ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பை பார்த்து மாடு மிரண்டுபோய் அங்கு விளையயாடிக் கொண்டிருக்கும் சின்ன பையனை நோக்கி ஓடி வருகிறது. இதைப்பார்க்கும் சிறுவனின் தாய், பதறிப்போய் ஓடி வருகிறார். இந்த கனவுக்கும், தனக்கும் என்ன தொடர்பு என விஜய் ஆண்டனி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரது தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு தத்துப்பிள்ளை என்று.
இதையடுத்து, தனது பூர்விகத்தை அறிந்து கொள்வதற்காக, தாய், தந்தையைத் தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. தமது தாய் பற்றிய விவரம் மிக எளிதாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அந்த விவரத்துடன் தாயை தேடிச் செல்கிறார். ஆனால் அவரது தாய் கனவில் வரும் சம்பவத்தின் போது மாடு முட்டி இறந்துவிட்டது தெரிய வருகிறது. இதையடுத்து தமது தந்தை பற்றி அறிந்து கொள்வதற்காக, தாயின் சொந்த ஊரான கனவுக்கரைக்கு விரைகிறார். கிராம மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள மருத்துவராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே தந்தையையும் கண்டுபிடிக்க முயல்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார், அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
வழக்கமான தமிழ் சினிமா தான். ஆனால் வித்தியாசமான திரைக்கதை மூலம் அதை சொல்ல முயன்றிருக்கிறார் கிருத்திகா. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார் என்பதை கடைசி வரை சஸ்பென்சாக வைத்திருப்பதும் நல்ல திரைக்கதை யுத்தி. விஜய் ஆண்டனி தமது தந்தையை தேடும் முயற்சியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாவற்றிலும் அவரையே பயன்படுத்தி இருப்பது புதிய முயற்சி. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல அமெரிக்காவில் வசதியாக வாழும் ஒரு பெரிய டாக்டர், தன்னுடைய பூர்வீகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து இந்தியா வருவதற்கு சொல்லப்பட்ட காரணம் அவ்வளவு வலுவாக இல்லை. அதுவும் எந்த ஒரு வசதியும் இல்லாத கிராமத்திற்கு வந்து பொதுசேவை செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.
அமெரிக்க டாக்டர், தாய், தந்தையை தேடும் இளைஞர், பிளாஷ்பேக் காட்சிகளில் ரொமான்ஸ் நாயகன், ஆக்ஷன் ஹீரோ என அனைத்து பரிமாணங்களையும் சரியாக செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அளவுக்கு அதிகமாகவும், இல்லை குறைவாகவும் இல்லை. ஆனால் எல்லா கேரக்டர்களையும் நானே தான் பண்ணுவேன் என அடம் பிடிப்பது சரிதானா பாஸ்.
அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள். அனைவருக்குமே ஒரே வேலை தான். விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடுவது, காதலிப்பது, இவ்வளவு தான் வேலை என்பதால் சுலபமாக செய்திருக்கிறார்கள்.
காமெடிக்கு நான் பொறுப்பு என அசரடிக்கிறார் யோகிபாபு. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புவெடி தான். செம டைமிங் ரைமிங் காமெடி. வேல ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என இரண்டு வில்லன்கள். ஹீரோவுக்கே முழு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளதால், பெரியதாக வேலை இல்லை இவர்களுக்கு. முக்கியமான கதாபாத்திரத்தில் நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ். வழக்கம்போல் திறம்பட செய்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல் எல்லாமே கேட்கும் ரகம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என எல்லாமே ஒ.கே. தான்.
திரைக்கதைக்கு செலுத்திய கவனத்தை, கதையிலும் செலுத்தியிருந்தால், காளி இன்னும் கொஞ்சம் உக்கிரமாக இருந்திருக்கும்.