Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பார்ஸிலோனாவில் ஸ்ரேயாவிடம் திருட்டு!

ஆர்யாவுடன் சிக்குபுக்கு எனும் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லண்டன் சென்ற ஸ்ரேயா, அப்படியே, டான் சீனு என்ற தெலுங்கு படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றார். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'போக்கிரி ராஜா' என்ற மலையாளப் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் சென்றார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரேயாவும், அவருடைய நண்பர்களும் அங்கு ஷாப்பிங் சென்றார்கள். அங்குள்ள கடை வீதிகளில் ஸ்ரேயா வீட்டு அலங்கார பொருட்கள், காலணிகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கினார்.
ஷாப்பிங் முடிந்து அவரும், நண்பர்களும் ரெயிலில் ஓட்டலுக்கு திரும்பினார்கள். அப்போது, ஸ்ரேயாவின் 2 பைகளையும், அவர் வாங்கிய காலணிகளையும் யாரோ திருடிவிட்டார்கள். அவர் பறிகொடுத்த 2 பைகளிலும் வீட்டு அலங்கார பொருட்கள் இருந்தன. பெரிய விலைதான் என்றாலும் வெளிநாட்டுப் பொருள்கள் திருட்டு போய்விட்டதே என்று ஸ்ரேயா அலட்டிக்கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற திருட்டுகள் நடைபெறுவது சகஜம்தான். ஸ்பெயின் ஒரு அழகான நாடு. பார்சிலோனா மிக அழகான நகரம். மீண்டும் இதே நகரத்துக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் மீண்டும் வரும்போது, என் பொருட்களை கழுத்தில் கட்டிக்கொள்வேன்'' என்றார் காமெடியாக.