Don't Miss!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பார்ஸிலோனாவில் ஸ்ரேயாவிடம் திருட்டு!
ஆர்யாவுடன் சிக்குபுக்கு எனும் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லண்டன் சென்ற ஸ்ரேயா, அப்படியே, டான் சீனு என்ற தெலுங்கு படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றார். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'போக்கிரி ராஜா' என்ற மலையாளப் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் சென்றார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரேயாவும், அவருடைய நண்பர்களும் அங்கு ஷாப்பிங் சென்றார்கள். அங்குள்ள கடை வீதிகளில் ஸ்ரேயா வீட்டு அலங்கார பொருட்கள், காலணிகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கினார்.
ஷாப்பிங் முடிந்து அவரும், நண்பர்களும் ரெயிலில் ஓட்டலுக்கு திரும்பினார்கள். அப்போது, ஸ்ரேயாவின் 2 பைகளையும், அவர் வாங்கிய காலணிகளையும் யாரோ திருடிவிட்டார்கள். அவர் பறிகொடுத்த 2 பைகளிலும் வீட்டு அலங்கார பொருட்கள் இருந்தன. பெரிய விலைதான் என்றாலும் வெளிநாட்டுப் பொருள்கள் திருட்டு போய்விட்டதே என்று ஸ்ரேயா அலட்டிக்கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற திருட்டுகள் நடைபெறுவது சகஜம்தான். ஸ்பெயின் ஒரு அழகான நாடு. பார்சிலோனா மிக அழகான நகரம். மீண்டும் இதே நகரத்துக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் மீண்டும் வரும்போது, என் பொருட்களை கழுத்தில் கட்டிக்கொள்வேன்'' என்றார் காமெடியாக.