Don't Miss!
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தொடர்ந்து 40 மணி நேரமாக சண்டை போடும் விஜய்..'தெறி'க்காக
சென்னை: தெறி படத்திற்கான அதிரடி சண்டைக் காட்சி ஒன்றை தொடர்ந்து 40 மணி நேரங்களாக இயக்குநர் அட்லீ படம் பிடித்து வருகிறாராம்.
ராஜா ராணி படத்தின் மூலம் புகழ்பெற்ற அட்லீ தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து விட அட்லீ திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக சில வாரங்களுக்கு தமிழ்த் திரையுலகமே ஒட்டுமொத்தமாக முடங்கியது.
மழையால் ஏற்பட்ட இந்த தாமதத்தை சரி செய்யும் நோக்கில் தற்போது தெறி படத்தின் சண்டைக் காட்சிகளை இரவுபகலாக எடுத்து வருகிறார் அட்லீ.
தற்போது தெறி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் மேற்பார்வையில் அட்லீ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
Posted by George C. Williams on Monday, December 21, 2015
இதற்காக தொடர்ந்து 40 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் அட்லீ. இந்தத் தகவலை அட்லீ மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளார் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.