Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காஜல்-பரத்-பேரரசு
இயக்கம், ஓரிரு காட்சிகளில் தலையைக் காட்டுவது, பாட்டு எழுதுவது என கலக்கி வந்த இயக்குநர் பேரரசு தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார்.
திருப்பாச்சி மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பேரரசு. அதிரடியான இரு படங்களை விஜய்க்குக் கொடுத்து கலக்கிய பேரரசு, அவர் நடித்த படங்களில் ஓரிரு காட்சிகளிலும் வந்து போனார்.
ஆனால் விஜய்யை வைத்து அவர் எடுத்த படங்களுக்குப் பிறு பேரரசு சிற்றரசு ஆகி விட்டார். அஜீத்தை வைத்து இயக்கிய திருப்பதி, விஜயகாந்த்தை வைத்து இயக்கிய தர்மபுரி ஆகியவை பெரும் தோல்விப் படங்களாகின. இந்த நிலையில் தற்போது மீண்டும் புத்தெழுச்சியுடன் திரும்பி வந்துள்ள பேரரசு, காஜல்-பரத்தை வைத்து பழனியை இயக்கிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல இந்தப் படத்திலும் பேரரசுவே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். பேரரசு பாணி அதிரடி, ஆக்ஷன் படமான இந்தப் படம் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு படு வேகமாக வளர்ந்து வருகிறது. காதலுடன் திரிந்த பரத் கையில் அரிவாளைக் கொடுத்து அதகளம் பண்ண வைத்திருக்கிறாராம் பேரரசு. இப்படத்தின் மூலம் இன்னொரு அவதாரமும் எடுத்துள்ளார் பேரரசு. அதாவது, தான் எழுதிய ஒரு குத்துப் பாட்டுக்கு தானே குரல் கொடுத்து கலக்கியுள்ளாராம். லோக்கு லோக்கு லோக்கலு என்னை ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டுக்கு அம்சமாக குரல் கொடுத்துள்ள பேரரசு, இனிமேல் தான் இயக்கும் படங்களில் குறைந்தது ஒரு பாட்டையாவது பாட முடிவெடுத்துள்ளாராம். அஷ்டாவதானி டி.ராஜேந்தர் போல பேரரசுவும், ஒவ்வொரு துறையிலும் புகுந்த விளையாடப் போகிறாராம். எப்படியோ, பேரரசு கோலிவுட்டில் மறுபடியும் முடி சூடினால் சந்தோஷம்தான்! Comments |