Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீனா புறப்பட்டார் விஜய்!!
சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற உலகப் பட விழா நடக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2500 படங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த விழாவில் திரையிட விஜய்யின் காவலன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் காவலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.
வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டார் விஜய். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாட்டு கலைஞர்களும் திரைப்படங்களும் பங்கேற்கும் இந்த விழாவில் நானும் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது", என்றார்.
இலங்கை மீது தடை-ஜெவுக்கு விஜய் பாராட்டு:
இந் நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரணக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்ததாக ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோஷத்தோடும் சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!