Don't Miss!
- News நான் அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதிப்பவன்.. காப்பிரைட்ஸ் வழக்கில் இளையராஜா வாதம்
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிரஞ்சீவிக்கு மகள் வாழ்த்து
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷிரீஷ் பரத்வாஜை காதல் மணம் புரிந்து டெல்லிக்குப் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஹைதராபாத் திரும்பிய அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து சிரஞ்சீவி குடும்பத்தினர் மனம் இறங்கினர். ஸ்ரீஜாவைப் பார்த்து சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்தனர். அவரது குழந்தையையும் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ரீஜா.
எனது தந்தை சிறந்த அரசியல்வாதியாக விளங்குவார். மக்களுக்காக சிறப்பாக உழைப்பார். நான் அவரது அதிர்ஷட தேவதை. நான் கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் கொடுக்காமல் போய் விட்டார் (கணவர்?). அது மட்டுமே எனக்கு அவரிடம் உள்ள வருத்தம்.
நான் பிறந்த பின்னர்தான் அவருக்கு படங்களில் நல்ல நல்ல ரோல்கள் கிடைத்தனவாம். அவருடைய சில படங்களை நான் பார்த்துள்ளேன். அத்தனை படங்களிலும் நன்றாகவே நடித்துள்ளார்.
தந்தையால் எனக்கு எப்போதும் பெருமைதான். படப்பிடிப்புகளுக்கு நானும் கூடவே செல்வேன். அவரது நடிப்பைப் பார்த்து ரசிப்பேன். படக்குழுவினருடன் நன்றாக பேசுவேன். அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
எனது தந்தை அரசியலுக்கு வந்தது எனக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. எப்போதுமே தான் அரசியலில் நுழைவேன் என்று அவர் கூறியதே இல்லை. யாரைப் பார்த்தும், யாரைக் கேட்டும் அவர் அரசியலில் நுழையவில்லை. அவருடைய சொந்த முடிவு இது.
சிறந்த தலைவராக அவர் விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்ைல. அவருக்கு நல்ல இதயம் உள்ளது. நல்ல மனிதரும் கூட. இதுதான் அவரை மக்களுக்கு சேவை செய்யத் தூண்டியிருக்கிறது.
அவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவரும் அதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தன்னை நம்பியவரை அவர் எப்போதும் கைவிட்டதில்ைல.
எனது தந்தைக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீஜா.