Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிரதீபா பாட்டீலுக்கு ராஷ்டிரபதி பவனில் 'ஸ்லம்டாக்' திரையீடு
இப்படத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத், அன்சாரி மற்றும் ஸ்லம்டாக் படக் குழுவைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.
ராஷ்டிரபதி பவன் ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை ஸ்லம்டாக் திரையிடப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் படத்தைப் பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து இப்படத்தை பார்க்க நேரிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, கவுரமாக உணர்கிரேன்.
இந்த நாட்டுக்காக நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக நலிவடைந்த சமுதாயத்தினருக்கு நாம் நிறையச் செய்ய வேண்டியுள்ளது.
இப்படத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அழகாக அது உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், படத்தின் இயக்குநர் டேனி பாயில், இப்படத்தின் இசையை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
பாடலாசிரியர் குல்ஸார் கூறுகையில், குடியரசுத் தலைவருடன் இணைந்து படம் பார்த்தது பெருமையாக உள்ளது. இப்படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்.
இருந்தாலும் இன்று குடியரசுத் தலைவருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
மத்திய அமைச்சர்கள் கிருஷ்ண தீரத், குமாரி ஷெல்ஜா, சல்மான் குர்ஷித், சிபிஐ இயக்குநர் அஷ்வினி குமார் மற்றும் பலரும் இந்த சிறப்பு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.