Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யுவன்சங்கருக்கு விவாகரத்து கிடைத்தது
இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா. பூவெல்லாம் கேட்டுப் பார் படம் மூலம் தந்தை வழியில் இசையமைப்பாளரான யுவன், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கடந்த 2002ம் ஆண்டு அவருக்கும், லண்டனைச் சேர்ந்த சுஜயா சந்திரனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2003ம் ஆண்டு இருவரும் லண்டனில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இதையடுத்து 2005ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி சென்னையில் யுவன், சுஜயா சந்திரனுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இருவரும் மீண்டும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிவதற்காக இருவருக்கும் சட்டப்பட்டி 6 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. அதன் பிறகும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தேவதாஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இக்காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது யுவனும், சுஜயாவும் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இருவரும் ஒருமித்த குரலில் விவாகரத்தில் உறுதியாக இருந்ததால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.