Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்ணீர் தேசத்தின் 'காதல் வானம்'!
ஈழத்திலிருந்து நார்வேக்குப் புலம்பெயர்ந்து அங்கே சம்பாதித்ததைக் கொண்டு, தன் சினிமா - இலக்கிய ஆர்வத்துக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பவர்.
வெறும் சப்தங்களே இசையாகிவிட்ட இன்றைய சூழலில் 'காதல் வானம்' எனும் ஒரு இனிய இசைத் தொகுப்பைத் தந்திருக்கிறார் வசீகரன், இசையமைப்பாளர் வி.எஸ். உதயாவுடன் இணைந்து.
'கண்டேன் சீதை', 'பீஷ்மர்', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. சினிமாவில்தான் ஜூனியரே தவிர, ஆல்பங்களை உருவாக்குவதில் சீனியர். இவருக்கு இது இருபதாவது ஆல்பமாம்!
காதல் வானம் தொகுப்பில் மொத்தம் எட்டு பாடல்கள். அனைத்துமே அர்த்தமுள்ள, மனதை வருடும் இனிய கீதங்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் போன்ற திரை இசை பிரபலங்களுடன் டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் ஜனனி, இலங்கையின் சிவகுமார், சாம்.பி.கீர்த்தன் மற்றும் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா ஆகியோரும் பாடல்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
சுப்ரமணியபுரம் படத்தின் சூப்ப்பர் ஹிட் பாடலான கண்கள் இரண்டால்.... பாடிய தீபா மிரியம் இந்த ஆல்பத்தில் 'சின்ன சின்ன மழைத்துளி...' என்ற பாடலுக்கு குரல் தந்துள்ளார்.
ஒரு தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்புதான் எத்தனை சிறப்புமிக்கது! இந்த ஆல்பத்தில் தன் தந்தைக்கு ஒரு மகன் வைக்கும் கவிதைப் படையலாக ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அப்பா எனும் ஓர் உருவம்... என்ற அந்தப் பாடலை கேட்கும்போதே கண்கள் பனிக்கின்றன.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் முப்பதுகளைத் தாண்டியபிறகுதான் தொலைத்த இளமையைத் தேடத் தொடங்குவார்கள். அந்தத் தேடலின் புள்ளி அநேகமாக அவர்களின் பள்ளிப் பருவம் அல்லது அந்தரங்கம் பகிரந்து கொண்ட அன்புத் தோழியாகத்தான் இருக்கும். இதை, சாந்து பொட்டு வைத்து... என்ற பாடலில் பதிவு செய்துள்ளார் வசீகரன். அதற்கு இனிமையாய் சுருதி கூட்டியுள்ளார் உதயா.
வி.எஸ்.உதயா பாடியிருக்கும் சின்னமணி அக்கா...., கிருஷ்ணராஜ் பாடியுள்ள பொங்கலோ பொங்கல்... பாடல்கள் சந்தேகமில்லாமல் இன்றைய சினிமாவுக்கேற்ற சூப்பர் ஹிட் மெட்டுக்கள்.
'இன்னும் இதுபோன்ற 10 ஆல்பங்களை உருவாக்கப் போகிறேன். அனைத்துமே காதலைக் கவுரவிக்கும் வகையில்தான் இருக்கும். காரணம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீரையும் வலிகளையும் மட்டுமே பதிவு செய்யத் தெரியும் என்று கூறுபவர்களுக்கு எங்கள் காதலையும், இனிய மலரும் நினைவுகளையும் இசையாய் பதிந்து தரும் ஆர்வம்தான், என்கிறார் கவிஞர் வசீகரன்.
தமிழுக்கு இப்படி இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்!