Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ 5 கோடி பேரம்... பேத்தி படத்தை வெளியிட அமிதாப் மறுப்பு!
உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் போல ஏ என்ற எழுத்தில் துவங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக்பச்சன் கேட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும் படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார்.
தற்போது இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன் பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனுக்கு திருமணம் நடந்த புதிதில், அவர்களின் கல்யாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் பல கோடி தருவதாக சர்வதேச பேஷன் பத்திரிகைகள் கேட்டன. அப்போதும் அவற்றை தர மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.