ரூ 5 கோடி பேரம்... பேத்தி படத்தை வெளியிட அமிதாப் மறுப்பு!

By Shankar

மும்பை: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக இரு பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசியுள்ளன. ஆனாலும் குழந்தையின் படத்தை பிரசுரிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் போல ஏ என்ற எழுத்தில் துவங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக்பச்சன் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும் படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார்.

தற்போது இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன் பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனுக்கு திருமணம் நடந்த புதிதில், அவர்களின் கல்யாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் பல கோடி தருவதாக சர்வதேச பேஷன் பத்திரிகைகள் கேட்டன. அப்போதும் அவற்றை தர மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X