Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாரீஸ் ஹில்டனுக்கு ஜெயில்
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டிச் சென்றதாக ஹாலிவுட் நடிகை பாரீஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர் பாரீஸ் ஹில்டன். அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி செய்திகளில் சிக்குபவர்.கடந்த பிப்ரவரி மாதம் இவரது கார் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இருப்பினும் 30 நாட்களுக்கு மட்டும் அவர் கார் ஓட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் அந்தக் காலம் முடிந்த பின்னரும் கூட கார் ஓட்டி வந்தார். இதையடுத்து அவர் மீது லாஸ் ஏஞ்செலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மைக்கேல் சாயர், ஹில்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸுடன் கார் ஓட்டிச் சென்றது மன்னிக்க முடியாது குற்றம். இதற்காக அவருக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். ஜூன் 5ம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.
தீர்ப்பைக் கேட்டதும் பாரீஸ் ஹில்டன் அதிர்ச்சியில் உறைந்தார். அவரது கண்களில் கண்ணீர் தழும்பியது. அவரது தாயார் கேத்தியும் அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்த தண்டனை மிகவும் கடுமையானது என்று ஹில்டனின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீர்ப்பைத் தொடர்ந்து விரைவில் பாரீஸ் ஹில்டன் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.