Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜீவா உடல் நாளை அடக்கம்
ரஷ்யாவில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல இயக்குநர், கேமராமேன் ஜீவாவின் உடல் நாளை சென்னையில் அடக்கம் செய்யப்படுகிறது.
இயக்குநர் ஜீவா, தாம் தூம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்தது. இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் முகாமிட்டிருந்தார் ஜீவா.செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஜீவா. ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவரது உடல், புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தாம் தூம் படக்குழுவினரிடம் ஜீவாவின் உடலை ரஷ்ய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஜீவாவின் உடலை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கின. அன்றைய தினமே உடலைக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை.
இதையடுத்து வருகிற வெள்ளிக்கிழமை ஜீவாவின் உடலை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஜீவாவின் உடல் ஃபின் ஏர் விமானம் மூலம் சென்னைக்குப் பயணிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை உடல் மும்பை வந்து சேரும்.
மும்பை விமான நிலையத்தில், ஜீவாவின் உடலை அவரது மைத்துனரும், இயக்குநருமான வசந்த் பெற்றுக் கொள்வார் (ஜீவாவின் மூத்த சகோதரியைத்தான் வசந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார்)
பின்னர் ஜீவாவின் உடலுடன் வசந்த் காலை 10.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ஜீவாவின் உடல் ராயப்பேட்டை மசூதி வளாகத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஜீவா இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் தனது மனைவி அனீஷாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.