Just In
- 18 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 48 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முப்பொழுதும் உன் கற்பனைகள் ஒற்றைப் பாடல் வெளியீடு!

அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.
அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.
இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!