கண்ணதாசன் தயாரிப்பில் "வானம்பாடி" படத்தில் நடிகை தேவிகாவை ஓவியமாக தீட்டிய கவியரசு! ரீவைண்ட் ஸ்பெஷல்!

சென்னை: தென்னிந்தியா திரைப்பட நடிகை 'தேவிகா' மணமகன் தேவை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்.

இவர் அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம்ஜிஆர்,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

'வானம்பாடி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வெற்றிக்கான காரணங்களை இந்த தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர் சுறா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

 வானம்பாடி திரைக்காவியத்தில் பல கலைஞர்கள்

வானம்பாடி திரைக்காவியத்தில் பல கலைஞர்கள்

கவியரசு கண்ணதாசன் தயாரிப்பில் வானம்பாடி திரைப்படம் 1963 ல் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகனாக லட்சிய நடிகன் 'எஸ்.எஸ் ராஜேந்திரன்' கதாநாயகியாக 'தேவிகா' இரண்டாம் கதாநாயகனாக ஆர் முத்துராமன் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் 'ஜி.ஆர் நாதன்'இசையமைத்தவர் கே.வி மகாதேவன்.

அணைத்து பாடல்களையும் எழுதியுள்ள கவியரசு

அணைத்து பாடல்களையும் எழுதியுள்ள கவியரசு

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார், இப்படமானது பாடல்களுக்காகவே திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடின; குறிப்பாக 'கங்கைக் கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே' மற்றும் 'தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே' போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

பாடல்களின் காட்சி அமைப்பு

பாடல்களின் காட்சி அமைப்பு

"கங்கைக் கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே" என்ற பாடலுக்காகவே 60-களில் மக்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இந்தப் பாடலில் 'தேவிகா' அமர்ந்திருக்கும் நிலையிலே படம்பிடிக்கப்பட்டிருக்கும்,ஜி.ஆர் நாதனின் ஒளிப்பதிவில் தேவிகாவின் முகத்தை ஓவியமாக தீட்டினால் முகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்த பாடல் காட்சிகளில், தேவிகாவின் லீப் மூவ்மெண்ட் இந்தப் பாடல்களுடன் அவ்வளவு சிறப்பாக பொருந்தியிருக்கும்.

"தூக்கணாங்குருவி கூடு" பாடலின் சிறப்பம்சம்

இந்த படத்தில்'தேவிகா' பின்னணி பாடகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், பின்னணி பாடகி ஆன பின்பு "தூக்கணாங்குருவி கூடு" என்ற முழு பாடளை ஒளிப்பதிவு கூடத்தில், எப்படி பதிவு செய்கிறார்கள் என்பதனை 1963-லயே படம் பிடித்து காண்பித்து இருப்பார்கள்; இது போன்ற பாடல்களுக்காகவே சினிமா ரசிகர்கள் 60-களில் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள் என்பது இப்படத்தின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X