Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்பெஷல்ஸ்
லண்டன்:
படங்களில் டான்ஸ்களும், பாட்டுக்களும் இருப்பதில் தவறில்லை என்கிறார் டைரக்டர்மணிரத்னம்.
இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கவுள்ள திரைப்பட விழாவில் மணி ரத்னம்கலந்து கொள்கிறார். அதற்காக லண்டன் வந்துள்ள மணி ரத்னம், அங்குள்ள நேருசென்டரில் நடந்த திரைப்பட பிரமுகர்கள், ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மணி ரத்னம் பேசுகையில், ஒருபடத்தில் டான்ஸும், பாட்டும் இருப்பதில்தவறில்லை. கதை இறுக்கமாகவோ அல்லது சீரியஸாகவோ இருக்கும்போது அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை லேசாக்கும் விததில் பாட்டுக்களையும்,டான்ஸ்களையும் வைப்பதில் தவறில்லை.
எனது படங்களில் டான்ஸுக்கும், பாட்டுக்கும் நான் முக்கியத்துவம் தருகிறேன். இவைஇரண்டும் இல்லாமல், எனது படங்கள் இல்லை. கதையை வெளிப்படுத்த உதவும் ஒருஊடகமாகவே இவை இரண்டையும் நான் கருதுகிறேன்.
வெறும் வசனங்கள் மூலம் படத்தைச் சொல்லாமல், பாட்டு, டான்ஸ் மூலமும்படத்தைப் புரிய வைக்க முடியும். படத்தில் வரப் போகிற சீரியசான விஷயத்தைஅவர்களுக்குச் சொல்லும் முன் அவர்களை தயார் படுத்த பாடல்களையும்,டான்ஸ்களையும் பயன்படுத்தலாம். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம்ஏற்றுக் கொள்வார்கள்.
ரோஜா படத்தில் அடிக்கடி தேசியக் கொடியை காஷ்மீர் தீவிரவாதிகள் எரிப்பது போலவருகிறதே. இது தவறில்லையா என்று கேட்கிறார்கள். படத்தை முழுமையாகபார்க்காமல், புரிந்து கொள்ளாமல் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது.
ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, படத்தில் வரும் காட்சிகளின் உணர்ச்சிகளைஅப்படியே தத்ரூபமாக காட்ட வேண்டும். ரோஜா படம், வடக்கில் இந்தியா சந்தித்துவரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. தெற்கிலிருந்து சென்ற ஒருபெண்ணின் கண்கள் வழியாக வடக்கில் நடக்கும் பிரச்சினைளை பார்த்த படம் இது.அங்கு என்ன நடக்கிறதோ அதை அப்படியேதான் காட்ட முடியும், வேண்டும்.
உண்மையிலேயே அங்கு கொடி எரிக்கப்படுகிறது. அதை எரிக்கும் தீவிரவாதிகள்,தங்களுக்கான காரணத்தை நியாயப்படுத்துகிறார்கள். அதை நாம் மாற்றிக் காட்டமுடியாது. இந்த சம்பவங்கள் மூலம் இந்தியர்களாகிய நமக்கு சந்தோஷம் இல்லைஎன்பதை சொல்ல இந்தக் காட்சிகள் அவசியமாக இருந்தது.
இதேபோல, பம்பாய். இதில் வரும் சில காட்சிகள், உண்மையிலேயே அங்குநடந்தவை. அங்கு வசித்த மக்களின் காலடியில் நடந்த நிகழ்வுகளை எனது படத்தில்பல காட்சிகளில் வைத்திருப்பேன்.
பம்பாய் படத்தை திரையிடுவதற்கு சென்சார் போர்டு சில தடங்கல்களைஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்தது. படம் முடிந்தும் கூட,அப்போது தேர்தல் வந்ததால், மூன்று மாதத்திற்கு முடக்கப்பட்டது என்றார் மணிரத்னம்.
ஐ.ஏ.என்.எஸ்.