நதீஷா: உப்புமாவுக்கு நோ நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனாலும் வரும் வாய்ப்புக்களை எல்லம் அள்ளிப் போட்டுக் கொள்ள மறுக்கிறார் நதீஷா.குறிப்பாக உப்புமா கம்பெனி படங்களில் நடிப்பதே இல்லை என்று தீர்மானமாய் இருக்கிறார்.விக்ரம் நடித்த "சாமுராயிலும், குணால் நடித்த "வருஷம் எல்லாம் வசந்தத்திலும் அனிதா என்ற பெயரில் நடித்தவரை எஸ்.ஏ.சந்திரசேகரன்தன்னுடைய "சுக்ரனில் புதுமுகம் நதீஷா என்று கூறி நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தினார்.சுக்ரன் உள்பட நதீஷா நடித்து எந்தப் படமும் ஓடாவிட்டாலும் நதீஷாவிடம் ஒரு கொள்கை. அதாவது பெரிய பேனர்கள் படங்களில் தான்நடிப்பாராம்.தன்னைத் தேடி வந்த சிறிய பட கம்பெனிகளின் வாய்ப்புகளுக்கு நோ சொல்லிவிட்டார். தமிழில் தான் இப்படி செய்கிறாரே தவிர,தெலுங்கில் கிடைச்சத அள்ளு என்ற பாலிஸியோடு இருக்கிறார்.இதனால் தமிழில் இவரை சீண்டுவார் யாருமில்லை."சாமுராய், "வருஷம் எல்லாம் வசந்தம் ஆகிய படங்களைப் பற்றி வாயைத் திறக்க மறுக்கும் அனிதா என்ற நதீஷாவிடம் என்ன கேட்டாலும்"சுக்ரனில் ஏற்பட்ட அனுபவங்களைத் தான் மூட்டை மூட்டையாக அவிழ்த்து விடுகிறார்."சுக்ரனில் நடிப்பதற்காக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினமும் வந்து கேட்டபோது நான்உண்மையிலேயே வாயடைத்துப் போனேன். அதிர்ச்சியில் என்னால் பேசக்கூட வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இது மட்டுமா? படத்தின் ஹீரோ, "7ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா என்றதும் எனக்கு மேலும் இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் அந்தப்படத்தை பார்த்த பிறகு நான் ரவி கிருஷ்ணாவின் தீவிர ரசிகையாகி இருந்தேன். அத்தோடு விட்டார்களா? படத்தில் விஜய்யும் நடிக்கிறார் என்றதும் நான் மயக்கம் போட்டு விழாத குறை தான். அந்தப் படத்தில் நடித்ததுஎனக்கு ஒரு கனவு போல இருந்தது."சுக்ரனில் என்னுடைய நடிப்பைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டுப் போனேன். இதற்கு முழுக்காரணமும் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அவர் ஒரு பெரிய டைரக்டராக இருந்த போதிலும் ஒவ்வொரு சீனையும் எனக்கு மிகவும் பொறுமையாக சொல்லித் தந்தார்.அவர் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் வேறு முன்னணி ஹீரோயின்களை போட்டிருக்கலாம். என் மீது நம்பிக்கை வைத்தார்கள். அந்தநம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று ஒரே "சுக்ரன் புராணம் தான். சரி, புதிய படங்களில் (வாய்ப்பு வந்தால்) கவர்ச்சிக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா? என்று சும்மா கேட்டு வைத்தோம். இப்போ ஒருதியேட்டரில் புதிய படம் ரிலீஸானால் போய் பாருங்கள். எல்லோரும் இளைஞர்களாகத் தான் இருப்பார்கள்.அவர்கள் கவர்ச்சியைத் தான் விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது நான் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கூறமுடியுமா? (நோட் திஸ்பாய்ண்ட்) என்று கவர்ச்சிக்கு ஒரு புது விளக்கம் தருகிறார்.பத்திரிக்கையாளர்களிடம் எப்போதும் சுக்ரன் புராணமே பாடிக் கொண்டிருக்கும் நதீஷா, அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது கிடைத்தவிஜய்-எஸ்.ஏ.சந்திரசேகரன் பேமிலி நட்பை பயன்படுத்து அடுத்து விஜய்யுடன் ஜோடி சேர முயன்று வருகிறார்.இப்போ தெரியுதா ஏன் சின்ன கம்பெனி படங்களை மறுக்கிறார் என்று...

By Staff

நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனாலும் வரும் வாய்ப்புக்களை எல்லம் அள்ளிப் போட்டுக் கொள்ள மறுக்கிறார் நதீஷா.

குறிப்பாக உப்புமா கம்பெனி படங்களில் நடிப்பதே இல்லை என்று தீர்மானமாய் இருக்கிறார்.

விக்ரம் நடித்த "சாமுராயிலும், குணால் நடித்த "வருஷம் எல்லாம் வசந்தத்திலும் அனிதா என்ற பெயரில் நடித்தவரை எஸ்.ஏ.சந்திரசேகரன்தன்னுடைய "சுக்ரனில் புதுமுகம் நதீஷா என்று கூறி நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தினார்.

சுக்ரன் உள்பட நதீஷா நடித்து எந்தப் படமும் ஓடாவிட்டாலும் நதீஷாவிடம் ஒரு கொள்கை. அதாவது பெரிய பேனர்கள் படங்களில் தான்நடிப்பாராம்.

தன்னைத் தேடி வந்த சிறிய பட கம்பெனிகளின் வாய்ப்புகளுக்கு நோ சொல்லிவிட்டார். தமிழில் தான் இப்படி செய்கிறாரே தவிர,தெலுங்கில் கிடைச்சத அள்ளு என்ற பாலிஸியோடு இருக்கிறார்.

இதனால் தமிழில் இவரை சீண்டுவார் யாருமில்லை.

"சாமுராய், "வருஷம் எல்லாம் வசந்தம் ஆகிய படங்களைப் பற்றி வாயைத் திறக்க மறுக்கும் அனிதா என்ற நதீஷாவிடம் என்ன கேட்டாலும்"சுக்ரனில் ஏற்பட்ட அனுபவங்களைத் தான் மூட்டை மூட்டையாக அவிழ்த்து விடுகிறார்.

"சுக்ரனில் நடிப்பதற்காக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினமும் வந்து கேட்டபோது நான்உண்மையிலேயே வாயடைத்துப் போனேன். அதிர்ச்சியில் என்னால் பேசக்கூட வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இது மட்டுமா? படத்தின் ஹீரோ, "7ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா என்றதும் எனக்கு மேலும் இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் அந்தப்படத்தை பார்த்த பிறகு நான் ரவி கிருஷ்ணாவின் தீவிர ரசிகையாகி இருந்தேன்.

அத்தோடு விட்டார்களா? படத்தில் விஜய்யும் நடிக்கிறார் என்றதும் நான் மயக்கம் போட்டு விழாத குறை தான். அந்தப் படத்தில் நடித்ததுஎனக்கு ஒரு கனவு போல இருந்தது.

"சுக்ரனில் என்னுடைய நடிப்பைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டுப் போனேன். இதற்கு முழுக்காரணமும் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அவர் ஒரு பெரிய டைரக்டராக இருந்த போதிலும் ஒவ்வொரு சீனையும் எனக்கு மிகவும் பொறுமையாக சொல்லித் தந்தார்.

அவர் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் வேறு முன்னணி ஹீரோயின்களை போட்டிருக்கலாம். என் மீது நம்பிக்கை வைத்தார்கள். அந்தநம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று ஒரே "சுக்ரன் புராணம் தான்.


சரி, புதிய படங்களில் (வாய்ப்பு வந்தால்) கவர்ச்சிக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா? என்று சும்மா கேட்டு வைத்தோம். இப்போ ஒருதியேட்டரில் புதிய படம் ரிலீஸானால் போய் பாருங்கள். எல்லோரும் இளைஞர்களாகத் தான் இருப்பார்கள்.

அவர்கள் கவர்ச்சியைத் தான் விரும்புவார்கள். அப்படி இருக்கும் போது நான் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கூறமுடியுமா? (நோட் திஸ்பாய்ண்ட்) என்று கவர்ச்சிக்கு ஒரு புது விளக்கம் தருகிறார்.

பத்திரிக்கையாளர்களிடம் எப்போதும் சுக்ரன் புராணமே பாடிக் கொண்டிருக்கும் நதீஷா, அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது கிடைத்தவிஜய்-எஸ்.ஏ.சந்திரசேகரன் பேமிலி நட்பை பயன்படுத்து அடுத்து விஜய்யுடன் ஜோடி சேர முயன்று வருகிறார்.

இப்போ தெரியுதா ஏன் சின்ன கம்பெனி படங்களை மறுக்கிறார் என்று...

More from Filmibeat

Read more about: big baner film nadisha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X