Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்!
ஆஸ்கர் விருது வென்ற லிங்கன் படத்தின் வெற்றியைக் கொண்டாட இந்தியா வந்துள்ள ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கும் தனது குடும்பத்துக்குமான தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.
ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட், இரண்டாம் உலகப் போரில் 490வது குண்டுவீச்சுப் பிரிவில் ஸ்க்வாட்ரனாக இருந்துள்ளார். அப்போது பிரிக்கப்படாத இந்தியாவில், கராச்சி நகரில் நிலை கொண்டிருந்தது அவர் பணியாற்றிய படைப் பிரிவு. பர்மாவில் ஜப்பானிய ரயில்வே லைன்களைத் தகர்த்து ஜப்பானை முன்னேற விடாமல் தடுத்ததில் இவர் பங்கு பெரிதாக இருந்துள்ளது.
பம்பாய், கல்கத்தா மற்றும் பல இந்திய நகரங்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் அடிக்கடி வந்து போவது வழக்கமாம்.
அர்னால்டுக்கு இப்போது 96 வயதாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அவரது பெட்டிகளை ஆராய்ந்தபோது, ஏராளமான கடிதங்கள் மற்றும் புகைப்பட பிலிம்களைக் கண்டெடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். அந்தக் கடிதங்கள் பெரும்பாலும் ஸ்பீல்பெர்க்கின் தந்தை தன் மனைவிக்கு எழுதியவை. அவற்றை அர்னால்ட் படிக்கப் படிக்க ஒரு கேமிராவில் பதிவு செய்து கொண்டாராம் ஸ்பீல்பெர்க்.
உறைகளுக்குள் டெவலப் செய்யப்படாமல் இருந்த ஏராளமான பிலிம்களை, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு டெவலப் செய்து பார்த்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்.
அவை அனைத்துமே இந்தியாவில் அவர் தந்தை இருந்தபோது எடுத்த படங்களாம். அப்போதுதான் தனது குடும்பத்துக்கும் இந்தியாவுக்கும் இத்தனை நெருங்கிய தொடர்பு இருப்பது ஸ்பீல்பெர்க்குக்கே தெரிந்ததாம்.
இந்திய - பாக் எல்லையில்...
'சரி இத்தனை தொடர்புடைய இந்தியா பற்றி... அல்லது இந்தியாவில் படமெடுக்க ஆசை இல்லையா?'
'நிச்சயம் உள்ளது... ஏற்கெனவே 1977-ல் க்ளோஸ் என்கவுன்டர்ஸ் படத்துக்காக ஒருமுறை இந்தியாவில் ஷூட் செய்திருக்கிறேன். பின்னர் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்காக வந்திருக்கிறேன். ஆனால் எனது அடுத்த படத்தின் ஒரு பாதி முழுவதையும் இந்திய - பாக் எல்லையில், காஷ்மீரில் படமாக்க ஆசை. இதற்கான ஸ்க்ரிப்ட் கூட முடிவடைந்துவிட்டது. எனது ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கவிருக்கின்றன," என்றார் ஸ்பீல்பெர்க்.
இந்தியாவில் யார் நடிப்பு பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, "அமிதாப் பச்சன்தான். மிகச் சிறந்த நடிகர். அவரது The Great Gatsby பார்த்து வியந்திருக்கிறேன்," என்றார்.