Don't Miss!
- News 50 ஆடுகள்.. 100 கிலோ ஆட்டுக்கறி.. விடிய விடிய திண்டுக்கல் விருந்து.. மூக்கை துளைத்த "மட்டன் குழம்பு"
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தாகம் தீர்க்காத சினிமா - வைரமுத்து
எனது இலக்கிய தாகத்தை சினிமா தீர்க்கவில்லை. அடுத்த நூற்றாண்டிலும் நான் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் படைத்தேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதில் கவிஞர் தமிழச்சிக்கு வைரமுத்து விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில் தமிழ் சினிமா தனது இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை என்ற தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார்.
ஒருவர் பிறக்கும்போது தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமா என்று 10 முதல் 30 சொந்தங்கள் இருப்பார்கள். ஆனால் நடுத்தர வயதை எட்டும்போது இந்த சொந்தங்கள் பாதியாக குறைந்து போகிறது.
1980களில் வைரமுத்து எழுத வந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்டது காதல், காதல், காதல். அந்தக் காதலை மட்டும் வைத்துக் கொண்டு 27 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். சினிமா என்னுடைய இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை.
எனவேதான் எனது படைப்புகள் அடுத்த நூற்றாண்டிலும் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் நான் இயற்றினேன் என்றார் வைரமுத்து.