Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Kizhakku vasalserial: நாகப்பன் பொண்ணுதான் எனக்கு உயிர் பிச்சை தந்தாள்!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் வீட்டுக்கு தலை குனிந்து திரும்பி வந்த தேவராஜ், அந்த நாகப்பன் பொண்ணுதான் எனக்கு உயிர் பிச்சை போட்டாள் என்று சொல்கிறார்.
ரொம்ப ஆசையாக ரொம்ப நாள் எதிரியாகவே பாவித்துவிட்ட நாகப்பனைப் பார்த்து, இனி இருவரும் நண்பர்களாகி விடலாம் என்று சமரசம் பேச அவர் வீட்டுக்கு போறார் தேவராஜ். இதற்காக இரவு முழுவதும் தூங்காமல் ஆசையாக இருந்தார்.
ஆனால், தேவராஜின் ஆளான ராமு, நாகப்பன் தனியாக அதிகாலை வெளியில் வந்திருக்கார்னு தெரிஞ்சுக்கிட்டு, தந்திரமாக நாகப்பனை கத்தியால் குத்திடறான். மகளின் தோளில் சாய்ந்து உயிரை விட்டுடறார் நாகப்பன்.
நாகப்பன் பிணத்தை
சமரசம் பேசப்போன தேவராஜ், நாகப்பனை பிணமாகப் பார்த்துட்டு, நண்பா நண்பா என்று கண்ணீர் விடறார். தேவராஜ்தான் நாகப்பன் கொலையானதுக்கு காரணம் என்று, நாகப்பனின் ஆட்களை விட்டு, நாகப்பனின் மனைவி தேவராஜை கொல்ல சொல்றாங்க.வேணாம், நிறுத்துங்கன்னு சொல்லித் தடுக்கறா நாகப்பனின் மகள் யாழினி. அப்பாவை கொன்னவனுக்கு தண்டனை தரக் கூடாதுன்னு சொல்றியா யாழினின்னு அம்மா கேட்கறாங்க.
பொறுங்க அம்மா
நான் ஒண்ணும் செய்ய வேணாம்னு சொல்லலை. ஆனால், பதினோரு நாள் பொறுமையா இருங்கம்மான்னுதான் சொல்றேன்னு சொன்ன யாழினி, யாரும் அவரை எதுவும் செய்யக் கூடாது. அவர் பாட்டுக்கு பார்த்துட்டு போகட்டும்னு ஆட்களுக்கு கட்டளை போடறா யாழினி. பிறகு தேவராஜ் வீட்டுக்கு திரும்பிடறார்.
ராமு ஷங்கர்
நாகப்பனைக் கொலை செய்த ராமு,தேவராஜின் மகன் சங்கரிடம், தான் நாகப்பனை துடி துடிக்க கொன்ற கதையை சுவாரஸ்யமா விவரித்து கூறுகிறான். சங்கரும், என்னையும் அழைச்சு இருக்கலாமே... என்னோட கத்தியும் அவன் உடம்பில் இறங்கி இருக்கும்னு சொல்றான் சங்கர். எதுக்கு அவனை நானே துடி துடிக்க கொல்லணும்னு ஆசைப்பட்டேன். செய்துட்டேன்.. இதுதான் நான் தேவராஜ் ஐயாவுக்கு கொடுக்கும் பரிசுன்னு சொல்றான்.
கிராமத்தில் கேஸ்
கிழக்கு வாசல் கிராமத்தில் முதன் முறையாக தேவராஜ், நாகப்பனைக் கொன்ற தனது ஆள் ராமு மீது கேஸ் குடுத்துட்டு வீட்டுக்கு போறார்.வீட்டில் மிகவும் பயத்துடன் தேவராஜை காணலைன்னு காத்துகிட்டு இருந்த மனைவி, தங்கை, தங்கையின் மகள் மூவரும் தேவராஜை கண்டு ஒடி வர்றாங்க. நீங்க உயிரோட வருவீங்கன்னு நான் நினைச்சு பார்க்கலைங்க. அவங்க வீட்டுக்கு எதுக்கு போனீங்கன்னு கேட்கறாங்க.
பொண்ணு யாழினி
நான் ஒண்ணு நினைச்சு போனேன்.அங்கே வேற ஒண்ணு நடந்துருச்சு. எனக்கு நாகப்பன் பொண்ணுதான் உயிர் பிச்சை போட்டு,அனுப்பி வச்சா.அவளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கான் நாகப்பன்னு சொல்றார்.அதே போல நடுக் கடலில் மாட்டிகிட்ட ஒரு மீனவரை காப்பாத்த காசியை சமாதானம் செய்து அனுப்பி வைக்கறா யாழினி. நாகப்பன் ஐயா சாகலைங்க...உங்க உருவத்துல உயிரோட இருக்கார்னு நாகப்பன் ஆட்கள் பேசிக்கறாங்க.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!