Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்ன டைரக்டரே சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா...பாக்யலட்சுமியை ஜவ்வா இழுக்குறீங்களே
சென்னை : பாக்யலட்சுமி சீரியலை ஜவ்வாக இழுத்து கொண்டே போகிறீர்களே எப்போ தான் முடிப்பீங்க... இப்போதைக்கு சீரியலை முடிக்கிற ஐடியா இல்லையா என ரசிகர்களே கேட்க துவங்கி விட்டனர். சீரியல் முடிந்து விடும் என்பதாலோ என்னவோ பல விஷயங்களை லாஜிக்கே இல்லாமல் செய்கிறீர்களே என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. கிட்டத்தட்ட 1000 எபிசோட்களை நெருங்கி வரும் இந்த சீரியலை முதலில் சிவ சேகர் டைரக்ட் செய்து வந்த நிலையில், 550வது எபிசோடிற்கு பிறகு ஐ.டேவிட் இயக்கி வருகிறார்.
எங்க போனாலும் திட்டுறாங்க… இது வெறும் நடிப்பு… பாக்கியலட்சுமி சீரியல் கோபி உருக்கம் !
இத்தனை மொழிகளில் ஹிட்டா
முதலில் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான இந்த சீரியல் பிறகு கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டான இந்த சீரியல் தற்போது தமிழ் மற்றும் ஒடியா மொழியில் ரீமேக் செய்யப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
குடும்ப தலைவிகள் சீரியல்
குடும்ப தலைவிகள் படும் கஷ்டத்தை கூறுவதாக ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல், பிறகு பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக கதைக்களம் மாறியதால் பெண்களின் ஃபேவரைட் சீரியலாக மாறி உள்ளது. பாக்யாவின் கணவர் கோபி ரோலில் நடிக்கும் சதீஷ், இந்த சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணம். இவருடைய கேரக்டருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம். பாக்யா, ராதிகா இருவரையும் ஏமாற்றி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கோபி எப்போது சிக்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மெகா சங்கமம்
தற்போது சீரியலில் கோபியின் அப்பா ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் நடந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சத்யமூர்த்திக்கு கோபி பற்றிய உண்மை தெரிந்து விடுகிறது. ராதிகா வீட்டிற்கு நேரடியாக செல்லும் தனமும், மூர்த்தியும் கோபியை தான் ராதிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகிறார் என தெரிந்து கொண்டனர். ராமமூர்த்திக்கு கோபி-ராதிகா பற்றிய உண்மை தெரிந்ததும், செம ட்விஸ்ட் இருக்கு என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கதையை புஸ் என்று ஆக்கினார்கள்.
Recommended Video
உண்மையை சொல்லவே மாட்டீங்களா
இப்போது மூர்த்திக்கும், தனத்திற்கும் உண்மை தெரிந்து விட்டதாக காட்டுகிறார்கள். கோபியை தான் ராதிகா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை தெரிந்து கொண்டு வந்து, கோபியிடம் சண்டை போடுகிறார் மூர்த்தி. மீண்டும் ராதிகா வீட்டிற்கு செல்லும் மூர்த்தி - தனம், கோபியை நல்லவர் இல்லை என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, பாக்யாவின் கணவர் அவர் தான் என்பதை சொல்லவில்லை. பாக்யாவிடமும் உண்மையை சொல்லாமல், ராதிகாவிடமும் உண்மையை சொல்லாமல் ஊருக்கு கிளம்பி செல்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.
சீரியலை எப்போ முடிப்பீங்க
ராதிகாவிற்கோ, பாக்யாவிற்கோ கோபி பற்றிய உண்மை முகம் தெரிந்து விட்டதால் சீரியல் முடிந்து விடும் என்பதாலோ என்னவோ, இன்னும் சீரியலை முடிக்க மனம் இல்லாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டு செல்கின்றனர். தனமும், மூர்த்தியும் இரண்டு முறை ராதிகா வீட்டிற்கு சென்றும் கோபி பற்றிய உண்மையை சொல்லவேயில்லை. இதெல்லாம் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இருக்கே, சீரியலை எப்போ முடிப்பீங்க என ரசிகர்களே கேட்க துவங்கி விட்டனர்.