கஞ்சா கருப்பை அறையில் அடைத்து வைத்துள்ள பிக் பாஸ்: 'இது' தான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் கஞ்சா கருப்பை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்காமல் ஒரு அறையில் தங்க வைத்துள்ளதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருந்தனர். அதில் வாரம் ஒருவரை எலிமினேட் செய்ய திட்டமிட்டனர். ஆனால் எதிர்பாராவிதமாக ஸ்ரீ உடல்நலக்குறைவால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மேலும் தப்பியோட முயன்ற பரணியும் வெளியேற்றப்பட்டார்.

கஞ்சா கருப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட கஞ்சா கருப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக ஒரு அறையில் அவரை தங்க வைத்துள்ளனர்.

ரீ என்ட்ரி
தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 பேர் மட்டுமே உள்ளனர். அதனால் சுவாரஸ்யத்தை கூட்ட அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே கஞ்சா கருப்புக்கு ரீஎன்ட்ரி கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

கமல்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது முடிந்தால் தன்னை இந்த நிகழ்ச்சியில் மீண்டும் சேர்க்குமாறு கஞ்சா கருப்பு கமலுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் இந்தி
ரீ-என்ட்ரி கொடுப்பது ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் இந்தியில் நடந்தது தான் இந்த ரீ-என்ட்ரி. அதையும் காப்பியடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











