Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிஸ்கவரி சேனலில் போராட்டக்களத்தில் சிக்கியவர்களின் கதை
தினமும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் ஐ ஷுட் நாட் பி அலைவ்' நிகழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் முடிவெடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவகள் ஆகியவற்றை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
பனி படர்ந்த கிர்கிஸ்தான் காடுகளில் ராட்சஸ பனிப்புயலுடன் நடக்கும் போராட்டம், கோஸ்டா ரிக்காவில் சுறாக்கள் நிறைந்த தண்ணீரில் நடக்கும் பயணம், மான்ட்டனா மலைகளில் கரடிகளின் தாக்குதல்கள், ஆப்பிரிக்காவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் என பல்வேறுபட்ட ஆபத்தான சூழல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் விளக்குகிறது, தொடர்.
இதன் ஒவ்வொரு அத்தியாயமும் மனிதர்களின் தாங்குசக்தியை நிரூபிக்கிறது. அசாதரணமான ஆபத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை மிகத் துல்லியமாக விவரிப்பதை காணலாம்.
கடந்த வாரங்களில் நியூசிலாந்தில் நடைபயணம் மேற்கொள்ளும் இருவரின் கதை ஒளிபரப்பானது. ஒரு பனிச்சுவரை சுற்றி பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நிலையற்ற ஒரு பாறையின் விளிம்பில் பத்து நாட்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹவாயில் உள்ள 3 லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் தேசிய பூங்காவில் பயணம் மேற்கொள்ளும் டூவி, பாதை தவறி ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிருடன் திரும்புகிறார். மலை உச்சியில் இருந்து விழும் ஜோர்டான் நிகுரிட்டி நான்கு நாட்களுக்கு காணாமல் போவதையும், நண்பர்கள் கேரி மற்றும் டேவ் பயணம் செய்த எளிய ரக விமானம் கோளாறு ஆனதால் கரடிகள் மிகுந்த அலாஸ்காவில் சிக்கிக்கொள்வதையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதையும் ஒளிபரப்பினார்கள்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் வீர சாகசங்களினால் பார்வையாளர்களை கட்டிப்போடுவதுதான் நிகழ்ச்சிக்கு சிறப்பம்சமாகும்.
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!