Just In
- 1 hr ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 2 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
eeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்?
சென்னை: முதலில் மலர் பிடிகொடுக்கலை... இப்போ வெற்றி என்னவோ ரொம்பவே தள்ளிப் போறான்...ஓ மை கடவுளே...இதுதான் கதையேவா? என்னங்கடா உங்க கதை... புருஷனையும், பொண்டாட்டியையும் ஒரு வருஷத்துக்கு மேல தள்ளி வச்சு பார்க்கறீங்க?
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றிக்கும் மலருக்கும் எதிர்பாராதவிதமா நடந்த கல்யாணத்தை வச்சு.. இயக்குநர் எபிசோடை நகர்த்தும் விதம் இருக்கே...ஐயயோ...!
முதலில் இருவரும் பேசிக்கறாங்க.. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நல்ல அபிப்ராயம் வருது. அப்புறம் ஒருத்தர் மீது ஒருத்தருக்கு காதல் வருது. அதை சொல்வதற்குள், வெற்றியின் மீது மலருக்கு சந்தேகம்னு ஒன்னு வருது.
ஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்!

சொல்லிட்டீங்களா
குடும்பமே வெற்றியும் மலரும் தங்கள் காதலை சொல்லிக்கிட்டாங்களான்னு எதிர்பார்த்து இருக்க, ஈரமான ரோஜாவே சீரியலின் இளமைக்குத் தக்க மாதிரி ரசிகர்களும் ஆவலா கத்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு வழியா காதலையும் சொல்லி, மலர் வெற்றியை மாமான்னு கூப்பிட ஆசைன்னு சொல்லி வெற்றியின் அனுமதியுடன்.. மூச்சுக்கு முன்னூறு தடவை அவள் மாமா மாமான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க.

என்னடி மாமா
மலர் மாமான்னு அழைக்க அழைக்க வெற்றியும் சலிக்காமல் என்னடி என்னடின்னு கூப்பிடறான். மாமா சாப்பிட வாங்க மாமா...இல்லை மலர் நான் வெளியில் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்னு வெற்றி சொல்ல, என்ன மாமா நீங்க.. உங்களுக்காக நான் ஒருத்தி சாப்பிடாம உட்கார்ந்து இருக்கேன் மாமான்னு மலர் சிணுங்கறா.

வாடி உனக்கு மாமா
வாடி உனக்கு மாமா தோசை சுட்டுக் தரேன்.. சாப்பிட்டு தூங்குடின்னு வெற்றி சொல்ல, அது வந்து மாமா எனக்கு முட்டை தோசை சுட்டுத் தருவீங்களா மாமான்னு மலர் கேட்க, வாடி மாமா எப்படி சுட்டுத்தரேன்னு பாருன்னு இவன் சொல்ல அவள் சாப்பிடத் தயாரா கிச்சனுக்கு வர்றா. அவன்முட்டை தோசை மட்டும் இல்லை, சில்க் தோசை, கேரட் தோசை, தக்காளி தோசை எல்லாம் சுட்டுத் தர்றான். சூப்பரா இருக்கு மாமா... சூப்பரா இருக்கு மாமா.. போதும் மாமான்னு இப்படி ஆயிரத்தெட்டு மாமா, ஆயிரத்தெட்டு டி சொல்லி இருவரும் பேசிக்கிறாங்க.

டைம் வேணும் மாமா
முதலிரவுக்கு மலரை வழிக்கு கொண்டு வரணும் என்று இயக்குநர் கே. பாக்யராஜ் நடித்து வெளிவந்த படம் முந்தானை முடிச்சு.. இது நம்மாளுன்னு அத்தனை படங்களை போட்டுப் பார்த்த பிறகும் மலர் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறா. ஒரு வழியா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு கேட்க, டோட்டலா மாறிப்போயிட்டான் வெற்றி.

நடுவில் தலையணை
பெட்டில் நடுவில் தலையணை வச்சுக்கிட்டு படுக்கறதென்ன.. சட்டையில் பட்டன் இல்லேன்னாலும் மலரைக் கூப்பிடமா வேற சட்டையைப் போட்டுக்கறது என்னன்னு ஓவரா பண்றான்.. மாமா நான் இப்போ தயாராயிட்டேன்னு மலரை சொல்ல விடாம சூழ்நிலையும் அமையுது. வெற்றி பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்புக்கு கொடுத்து நடந்துக்கறானாம்.
இதைத்தாங்க... மலர் வெற்றி கியூட் ஜோடி.. கதை அப்படித்தான் போகும். உங்களுக்கு என்ன வந்துச்சு.. பிடிச்சா பாருங்க. பிடிக்கலேன்னா விடுங்கன்னு ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்கள் சொல்றாங்க... ஓ மை கடவுளே!