Don't Miss!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
'சிவாஜி'க்கு விருது- குஷியில் சின்மயி!

சிவாஜி படத்தில் இடம் பெற்ற சஹானா தூரல் தூவுதோ என்ற பாடலைப் பாடியவர் சின்மயி. சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாட்டுக்காக, அவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.
இந்த விருது குறித்து சின்மயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விருது பெற்றுத் தந்தப் பாடலை எனக்காகக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே ஒரு புனிதமான அனுபவம் என்றார் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படம்தான் சின்மயி திரைப்படங்களில் பாடிய முதல் படமாகும். 2002ல் வெளியான அந்தப் படத்தில் பாடி அறிமுகமான சின்மயி பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
24 வயதாகும் சின்மயி, முதன் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் மட்டுமல்லாமல் டப்பிங், டிவி ஷோக்களை நடத்துவது, சொந்த நிறுவனத்தை நிர்வகிப்பது, சாரங்கி கலையில் நிபுணத்துவும் என பன்முகம் கொண்டவர் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.